Sat. Jun 13th, 2026

வேலூர், ஜூன் 7-

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர். எஸ். ரோடு அருகில் பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளர் ஆர். பி. செந்தில். இவர் ஒரு அரசியல் பிரமுகராக உள்ளார். இப்பள்ளியின் பின்புறத்தில் தீப்பெட்டி சம்பந்தமான மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை மற்றும் உற்பத்தி செய்து வருபவர்களை பிரம்மாஸ் பள்ளியில் இருக்கும் லைவ் கேமராவில் பார்த்து தொழிற்சாலையில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களையும் கண்காணித்து வருகிறார் செந்தில்.

ஒரு பள்ளியை நிர்வகிக்கும் பள்ளி நிர்வாகம் பள்ளி மாணவர்களை மட்டும் கண்காணிக்க வேண்டும். ஆனால் இந்த பள்ளி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக பள்ளியின் பின்புறத்தில் உள்ள தீப்பெட்டி தொடர்பான தொழிற்சாலையை நடத்தி வருகிறார் கேமரா மூலம் கண்காணிப்பு செய்து வருகிறார்.மேலும் இந்த பள்ளியின் கிளைப் பள்ளிகள் குடியாத்தம் பகுதியில் மட்டும் தரணம்பேட்டை, கூட நகரம் மற்றும் பல்வேறு இடங்களில் குறைந்தது ஐந்து கிளை பள்ளிகள் வைத்து பிரம்மாஸ் பேரிலேயே இயங்கி வருகிறது. மேலும் ஒரு சிபிஎஸ்சி பள்ளி என்று இருந்தால் கிளை எதுவும் இருக்கக் கூடாது என விதி உள்ளது.

ஆனால் இந்தப் பள்ளியில் பிரம்மாஸ் என்ற பெயரில் குடியாத்தம் பகுதியிலேயே பல்வேறு கிராமங்களில் பிரம்மாஸ் கிளை பள்ளிகள் உள்ளன. இவர் அரசியல் பிரமுகர் என்பதால் முன்னர் இருந்த திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளியின் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்து வந்தது. மேலும் இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் யாராவது இது தொடர்பான சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனு அனுப்பினால் மனு அனுப்பியுள்ள சமூக ஆர்வலர்களை இவர் மிரட்டுவது மற்றும் அவர்களை பயமுறுத்தும் வகையில் காவல்துறையில் இருக்கும் சில உயர் அதிகாரிகளை வைத்து மிரட்டுவது மற்றும் பள்ளியின் நிர்வாகம் ஒரு அரசியல் பிரமுகர் என்பதால் அவரிடம் இருக்கும் அடியாட்களை வைத்து மிரட்டுவதும், துன்புறுத்துவதும் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களையும் செய்து வருவதை இவர் தொடர்கதையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த பள்ளிக்கு கல்வி துறையில் உள்ள ஒரு குழுவினை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வரும். மேலும் இந்த பள்ளியின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகளையும், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசு நிர்ணயத்துள்ள கல்வி கட்டணத்திற்கு மேல் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது என்பது ஒரு கூடுதல் அதிர்ச்சி தகவலாகும். எனவே இப்பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத் தொகையை தகவல் பலகையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அரசு விடுத்துள்ள உத்தரவு ஆகும். ஆனால் இப்பள்ளியில் தகவல் பலகையில் இதுநாள் வரையில் எவ்விதமான தகவலும் எழுதுவதில்லை, எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தாங்கள் நேர்மையான அதிகாரிகளை அனுப்பி இந்த பள்ளியில் ஆய்வு செய்தால் இங்கே என்னென்ன குறைகள் மற்றும் ஊழல்கள் நடைபெறுகிறது என்பது தெரியவரும்.

எனவே இந்த மனுவின் உண்மை நிலையை கண்டுபிடித்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எந்தவித இடர்பாடும் இல்லாமல் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்துக் கொடுக்குமாறு அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என இந்த அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ம.சி.கார்த்திக் ஜி ,வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ்க்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார். இந்த புகார் மனுவின் மீது மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது . மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இணை ஆசிரியர்

வாசுதேவன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *