Sat. Jun 13th, 2026

தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியராக மதிப்புமிகு சரவணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் தருமபுரி ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார்.அதனை தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மாவட்ட பொருளாளர் புகழேந்தி மற்றும் செய்தி தொடர்பாளர் ராமதாஸ் அவர்கள் முன்னிலையில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன் துணைத் தலைவர் ரவி, நந்தகுமார் இணைச் செயலாளர்கள் குரு பிரசாத் சிங்காரவேலு துணைச் செயலாளர்கள் அருண்குமார் செயற்குழு உறுப்பினர்கள் பாலு , ஜெயம் சுரேஷ், கோவிந்தசாமி பெரியசாமி , சங்க உறுப்பினர்கள் மணிகண்டன், சரவணன், பாலமுருகன், வெங்கடேஷ், சுகுமார், மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு சரவணன் ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலி வீட்டுமனையில் மத்திய அல்லது மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டிதருதல்,வீட்டுமனைப் பட்டா வழங்காமல் விடுபட்ட, மாவட்ட மற்றும் தாலுக்காவில் பணிபுரியும், பத்திரிகையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்குதல் நலவாரிய அட்டை வழங்காமல் விடுபட்ட, மாவட்ட மற்றும் தாலுக்காவில் பணிபுரியும், பத்திரிக்கையாளர்களுக்கும் நலவாரிய அட்டை வழங்குதல், மறைந்த கலைஞர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் வேணுகோபால் அவர்களின் திருவுருவப் படத்தினை பத்திரிக்கையாளர் அலுவலகத்தில் திறந்துவைத்து, மலர்தூவி மரியாதை செலுத்துதல், மாவட்டத்தில் மற்றும் தாலுக்காவில், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் பொய்யான செய்திகளை பரப்பி, பத்திரிக்கையாளர்களின் பெயருக்கு அவதூறு பரப்பி உலாவரும் போலி பத்திரிக்கையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கை மனு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள், செய்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சிறப்பு செய்தியாளர் பாலக்கோடு

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *