Sat. Jun 13th, 2026

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நவகைலாய திருக்கோயிலில் ஆறாவது ஸ்தலமான கைலாசநாதர் சிவகாமியம்மன் வீற்றிருக்கும் திருக்கோயில் சனி ஸ்தலம் இத்திருக்கோவில் திருத்தேர் மிகவும் பழுதடைந்து திருத்தேர் ஓடி 78 ஆண்டுகள் ஆகியும் மிக அழகான மர சிற்பங்களுடன் அமைக்கப்பட்ட இந்த திருத்தேர் சிதிதலம்மடைந்து வெயில் மழையில் வீணாகிவிட்டது தற்போது இந்து சமய அறநிலை துறை ஏற்பாட்டில் நன்கொடையாளர்கள்ஏற்பாட்டில் புதிய திருத்தேர் செய்யும்படி திருக்கோவில் பக்தர்கள் ஊர் பொதுமக்களும் பல வருடங்களாக தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர் பக்தர்களின் கோரிக்கை ஏற்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது வரக்கூடிய சித்திரை மாதம் கைலாசநாதர் திருக்கோயில் சித்தரை திருவிழாவில் இத்திருத்தேர் தேர்ஓடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தேர்கட்டுமான பணி மிகவேகமாக நடைபெறுவதால் பக்தர்கள் ஊர்பொதுமக்களும் ஐந்து நிலைகள் கொண்ட 51 அடி உயரம் கொண்ட இந்த திருத்தேர் திருக்கோயில் வலம் வருவதுலலை காண பக்தர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

சுடலை மணி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *