
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா அவர்கள் தலைமையில் இன்று (18.05.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் நிலுவைகள் குறித்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.S.பேபி இந்திரா, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திரு.கு.செல்வராசு, தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி.கீதாலட்சுமி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.அறிவுடைநம்பி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.மீனா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திரு.ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஏகாம்பரம் மற்றும் பலர் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்.
கோபி
