Sat. Jun 13th, 2026

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கடமடை ஹவுசிங் போர்டு பகுதியில் கழிவுநீர் சாக்கடை பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி மனு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கடமடை ஹவுசிங் போர்டு பகுதியில் கடந்த பல மாதங்களாக கழிவுநீர் சாக்கடை முறையாக பராமரிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, கழிவுநீர் செல்ல வேண்டிய வடிகால் மற்றும் சாக்கடை அமைப்புகள் சரிவர செயல்படாத காரணத்தால் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்த சுகாதார சீர்கேட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த பிரச்சனை மேலும் மோசமடைந்து, குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டு, கடமடை ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் மற்றும் சாக்கடை அமைப்புகளை ஆய்வு செய்து, கழிவுநீர் தடையின்றி செல்லும் வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மேலும், இப்பிரச்சனை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களும் இம்மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளன.மக்கள் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றியுடன்,கடமடை ஹவுசிங் போர்டு பகுதி பொதுமக்கள்

பாலக்கோடு செய்தியாளர்

சரவணன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *